
உண்மை மற்றும் நீதிக்கான பாதையை மனிதகுலத்துக்கு அன்புடன் எடுத்துக் காட்டியவர் மகரிஷி வால்மீகி என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
மகரிஷி வால்மீகியின் பிறந்த நாளையொட்டி, தில்லியில் உள்ள வால்மீகி கோயிலுக்குச் சென்று ராகுல் காந்தி இன்று தரிசனம் செய்தார்.
இந்த நிலையில், வால்மீகி கோயிலுக்குச் சென்ற புகைப்படங்களை பகிர்ந்து ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“ராமாயணக் காவியத்தைப் படைத்த ஆதி கவி மகரிஷி வால்மீகியின் பிறந்த நாளில் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று காலை தில்லியில் உள்ள வால்மீகி கோயிலுக்குச் சென்றேன். மகாத்மா காந்தி இந்த வளாகத்தில் நிறைய நேரம் செலவிட்டுள்ளார். நான் பாபு நிவாஸில் இன்று காலை சிறிது நேரம் தங்கியிருந்தேன்.
உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்துக்கான பாதையை அன்புடனும் கருணையுடனும் மனிதகுலத்துக்கு எடுத்துக் காட்டிய மகரிஷி வால்மீகிக்கு வணக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.