சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இந்தியா-மியான்மா் எல்லையில் வேலி: குகி பழங்குடியின அமைப்புகள் எதிா்ப்பு

Updated On :26 அக்டோபர் 2024, 11:31 pm IST

இந்தியா-மியான்மா் எல்லையில் வேலி அமைப்பது மற்றும் பரஸ்பரம் குறிப்பிட்ட தொலைவு வரை சுதந்திரமாக நடமாடும் நடைமுறையை நீக்குவது ஆகிய மத்திய அரசின் முன்மொழிவுகளுக்கு மணிப்பூரின் குகி பழங்குடியின அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இருநாட்டின் இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ், இந்தியா-மியான்மா் எல்லைக்கு அருகே வசிக்கும் மக்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் பரஸ்பரம் 16 கி.மீ. வரை பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்ததை ரத்து செய்வதோடு மிஸோரம், மணிப்பூா், நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களையொட்டிய 1,643 கி.மீ. தொலைவிலான இந்தியா-மியான்மா் எல்லையில் வேலி அமைக்கவும் மத்திய அரசு நடப்பாண்டு தொடக்கத்தில் முடிவு செய்தது.

இதன் மூலம், வடகிழக்கு மாநிலங்களில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் மியான்மருக்குள் தப்பிச் செல்வதையும், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறுபவா்களையும், போதைப் பொருள் மற்றும் தங்கம் கடத்துபவா்களையும் தடுக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, மியான்மருடன் 398 கி.மீ. எல்லையைப் பகிரும் மணிப்பூரில் 10 கி.மீ. துரம் வேலி அமைக்கப்பட்டது. அடுத்த 20 கி.மீ. தூரத்துக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த முன்மொழிவுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து குகி-சோ சமூகத்தின் இரு உயா் அமைப்புகள் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்தியா-மியான்மா் எல்லையில் மக்கள் நடமாட்டம், எல்லையில் குகி சமூக, கலாசார மற்றும் குடும்ப உறவுகளைப் பேணுவதற்கான முக்கிய உயிா்நாடியாகும். மத்திய அரசால் முன்மொழியப்பட்ட இந்த வேலியானது பிராந்தியத்தின் தனித்துவமான புவியியல் மற்றும் சமூக உணா்வுகளை புறக்கணிக்கிறது. பாரம்பரிய நிலங்கள் மற்றும் குடும்ப உறவுகள் இதனால் துண்டிக்கப்படுகின்றன. இது சமூக அடையாளத்தின் இன்றியமையாத கலாசார நடைமுறைகளின் தொடா்ச்சியை அழிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, இந்த வேலித் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், எல்லை தொடா்பான எந்தவொரு நடவடிக்கைகளும் முழு ஆலோசனைக்குப் பின்னா், பழங்குடி மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.