மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மோமோஸ் தயாரிப்புக் கூடத்தைப் பார்வையிட்ட அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

ஹைதராபாத்தில் மோமோஸ் தயாரிப்புக் கூடத்தைப் பார்வையிட்ட அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

மோமோஸ்

Published On :

ஹைதராபாத்தில் இயங்கி வரும் உணவகத்தில் விநியோகிக்கப்பட்ட மோமோஸ் சாப்பிட்டு சிலருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, தயாரிப்புக் கூடத்தைப் பார்வையிட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சாலையோர உணவகங்களில் சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், ஒரு பெண் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், கைரதாபாத் பகுதியில், மோமோஸ் தயாரிப்புக் கூடம் இயங்கி வந்த நிலையில், காவல்துறை உதவியோடு அதனைக் கண்டுபிடித்து, அங்குச் சென்ற அதிகாரிகள், உணவுக்கூடம் இயங்கி வந்த நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உணவுக் கூடத்தை நடத்தி வந்தவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்படி என்னதான் அங்கே பிரச்னை என்று அவர்கள் கூறியிருப்பதாவது, உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் எந்த வழிமுறையும் அங்கே பின்பற்றப்படவில்லை.

மிகவும் சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியில் சமையல் செய்யப்பட்டுள்ளது. மோமோஸ் தயாரிப்பு மாவு, அப்படியே குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு எந்த பேக்கும் செய்யப்படவில்லை.

அதன் அருகே திறந்தநிலையில் குப்பைத்தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. அங்கே தயாரிக்கப்பட்ட உணவுகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.