ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைகேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்! வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு! விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!
/

ஆந்திரத்தில் நவ. 1 முதல் இலவச கேஸ் சிலிண்டர் திட்டம்!

ஆந்திரத்தில் இலவச எரிவாயு உருளை வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நவ. 1ஆம் தேதி தொடக்கிவைக்கவுள்ளார்.

News image

இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்துக்கான காசோலை வழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு - PTI

Updated On :30 அக்டோபர் 2024, 3:50 pm

ஆந்திரத்தில் இலவச எரிவாயு உருளை வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நவ. 1ஆம் தேதி தொடக்கிவைக்கவுள்ளார்.

இலவச எரிவாயு வழங்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பெட்ரோலிய நிறுவனத்திற்கு ரூ. 894 கோடி மதிப்பிலான காசோலை வழங்கிய பின்னர், இந்த அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

இலவச எரிவாயு உருளை வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்ய செவ்வாய்க்கிழமை (அக். 29) முதல் முன்பதிவு தொடங்கியது.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது சூப்பர் 6 என்ற பெயரில் தெலுங்கு தேசம் கட்சி அறிவித்த திட்டங்களில் ஒன்றாக இலவச எரிவாயு உருளை வழங்கும் திட்டம் உள்ளது.

இந்நிலையில் இந்தத் திட்டத்தின்கீழ் எரிவாயு வழங்கும் பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுடனான ஒப்பந்த தொகையை காசோலையாக வழங்கினார்.

இந்தத் திட்டத்துக்காக ஆந்திர சட்டப்பேரவையில் ரூ. 2,684 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.