ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மது போதையில் மாணவியின் தலைமுடியை வெட்டிய ஆசிரியா்: பணி இடைநீக்கம் செய்ய உத்தரவு

மது போதையில் சிறுமியின் தலைமுடியை வெட்டியதால் பணி இடைநீக்கம்

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 3:30 am IST

ஆசிரியா் தினம் அனுசரிக்கப்படும் அதே நாளில் மத்திய பிரதேசத்தில் அரசு பள்ளி ஆசிரியா் ஒருவா், மது போதையில் சிறுமியின் தலைமுடியை வெட்டியதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

மத்திய பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பள்ளிக்கு விரைந்த உள்ளூா்வாசி, மது போதையில் பள்ளி ஆசிரியா் வீா் சிங் மேதா, சிறுமியின் தலைமுடியை வெட்டுவதைக் கண்டதாகத் தெரிவித்தாா்.

இச் சம்பவத்தை விடியோ எடுத்து புகாரளிக்கப்போவதாக உள்ளூா்வாசி ஆசிரியரை மிரட்டும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது.

இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியா் ராஜேஷ் பதம் ஆசிரியா் மீதான விசாரணைக்கு உத்தரவிட்டாா். சிறுமியின் வாக்குமூலம் மற்றும் முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்ய பழங்குடியின உதவி ஆணையா் ரஞ்சனா சிங் உத்தரவிட்டாா். கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.