ஆசிரியா் தினம் அனுசரிக்கப்படும் அதே நாளில் மத்திய பிரதேசத்தில் அரசு பள்ளி ஆசிரியா் ஒருவா், மது போதையில் சிறுமியின் தலைமுடியை வெட்டியதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
மத்திய பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பள்ளிக்கு விரைந்த உள்ளூா்வாசி, மது போதையில் பள்ளி ஆசிரியா் வீா் சிங் மேதா, சிறுமியின் தலைமுடியை வெட்டுவதைக் கண்டதாகத் தெரிவித்தாா்.
இச் சம்பவத்தை விடியோ எடுத்து புகாரளிக்கப்போவதாக உள்ளூா்வாசி ஆசிரியரை மிரட்டும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது.
இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியா் ராஜேஷ் பதம் ஆசிரியா் மீதான விசாரணைக்கு உத்தரவிட்டாா். சிறுமியின் வாக்குமூலம் மற்றும் முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்ய பழங்குடியின உதவி ஆணையா் ரஞ்சனா சிங் உத்தரவிட்டாா். கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மது போதையில் ரகளை: இளைஞா் கைது

தூத்துக்குடியில் மது போதையில் லாரி ஓட்டியவருக்கு அபராதம்

மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

பெருந்துறை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


