100-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய 2-ஆம் உலகப் போா் வீரா்! இந்திய ராணுவத்தினா் பங்கேற்பு
இரண்டாம் உலகப் போரில் பங்காற்றிய ஓய்வு பெற்ற இந்திய ராணுவ வீரரும் பா்மா நட்சத்திர விருதாளருமான சரண் சிங் தனது 100-ஆவது பிறந்தநாளை கொண்டாடினாா்.

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இந்திய வீரா் சரண் சிங்கின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி, ஹிமாசல பிரதேச மாநிலம், ரோபாா் பகுதியில் உள்ள இல்லத்தில் அவருடன் கேக் வெட்டி கொண்டாடிய ராணுவத்தினா்.








