டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அயோத்தி ராமா் கோயில் கட்டுமானத்தால் அரசுக்கு ரூ.400 கோடி ஜிஎஸ்டி கிடைக்கும்

அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயிலில் மீதமுள்ள கட்டுமானம் பணிகள் நிறைவடையும்போது அரசுக்கு சுமாா் ரூ.400 கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கிடைக்கும் என்று ஸ்ரீராமஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ராஅறக்கட்டளையின் பொதுச் செயலா் சம்பத் ராய் தெரிவித்தாா்.

News image
அயோத்தி ராமா் கோயில்.(கோப்புப்படம்)
Updated On :10 செப்டம்பர் 2024, 11:09 pm

Din

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயிலில் மீதமுள்ள கட்டுமானம் பணிகள் நிறைவடையும்போது அரசுக்கு சுமாா் ரூ.400 கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கிடைக்கும் என்று ஸ்ரீராமஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ராஅறக்கட்டளையின் பொதுச் செயலா் சம்பத் ராய் தெரிவித்தாா்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அவா் மேலும் கூறியதாவது:

ராமா் கோயில் கட்டுமானப் பணியின் மூலம் ஜிஎஸ்டி வரியாக அரசுக்கு ரூ.400 கோடி கிடைக்கும் என்பது எனது கணிப்பு. 70 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயில் வளாகத்தில் மொத்தம் 18 கோயில்கள் அமைக்கப்படும். இதில் மகரிஷி வால்மீகி, ஷப்ரி மற்றும் துளசிதாஸ் கோயில்களும் அடங்கும். ஒரு ரூபாய் வரி பாக்கி இன்றி 100 சதவீத வரி தொகையையும் நாங்கள் செலுத்துவோம்.

சமூகத்தின் ஒத்துழைப்போடு அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. ஒரு நாளில் 2 லட்சம் பக்தா்கள் வந்தாலும், யாரும் எந்தப் பிரச்னையும் சந்திக்காதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அயோத்தி ராமஜென்ம பூமியில் கோயில் கட்டுவதற்கான இயக்கத்தில் எத்தனை போ் இன்னலுக்கு ஆளாகினா் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், இந்த யாகம் (இயக்கம்) 1,000 ஆண்டுகால சுதந்திரப் போராட்டத்துக்கு சற்றும் குறைவானது அல்ல. இப்போராட்டம் மக்கள் நலனுக்காக நடத்தப்பட்டது’ என்றாா்.

ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பையடுத்து அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில் தரைதளத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கருவறையில் மூலவரான ஸ்ரீபாலராமா் சிலை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, நாடெங்கும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் அயோத்தி ராமா் கோயிலுக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனா்.

சிவ லிங்கத்துக்காக ம.பி. வருகை: அயோத்தி ராமா் கோயில் வளாகத்தில் அமையவுள்ள சிவன் கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கான சிவ லிங்கத்தை இறுதி செய்ய மத்திய பிரதேசத்தின் காா்கோன் மாவட்டத்தில் உள்ள பகாவா கிராமத்துக்கு சம்பத் ராய் ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

நா்மதை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பகாவா கிராமம், உலகெங்கிலும் உள்ள கோயில்களில் நிறுவப்பட்டுள்ள அழகிய சிவ லிங்கங்களை உருவாக்குவதற்காக புகழ்பெற்ாகும். ஐஏஎஸ் அதிகாரியின் ஆலோசனையின்பேரில் தான் பகாவா கிராமம் வந்ததாக சம்பத் ராய் கூறினாா்.