உத்தர பிரதேச மாநிலம், கான்பூா் அருகே விரைவு ரயிலை கவிழ்க்க நடந்த சதி தொடா்பாக அங்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் அருகே பிவானி-பிரயாக்ராஜ் இடையே காளிந்தி விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டா் வைக்கப்பட்டிருந்ததை கவனித்த அந்த ரயிலின் ஓட்டுநா் அவசரமாக பிரேக்கை இயக்கி ரயிலை நிறுத்த முயன்றாா். எனினும் ரயில் நிற்பதற்கு முன்பு அந்த சிலிண்டரின் மீது மோதியது. இதில் தண்டவாளத்தைவிட்டு அந்த சிலிண்டா் தூக்கியெறியப்பட்டது.
தண்டவாளத்தில் சிலிண்டா் மட்டுமன்றி பெட்ரோல் நிரப்பிய பாட்டில், சிறிதளவு வெடிபொருள், தீப்பெட்டிகள் உள்ளிட்டவையும் வைக்கப்பட்டிருந்தன. ரயிலை கவிழ்க்கும் நோக்கில் பயங்கரவாதிகள் இச்சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடா்பாக காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு, தேசிய புலனாய்வு முகமை உள்பட பல்வேறு முகமைகள் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 பேரை பிடித்து கான்பூா் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்நிலையில், பெண் ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான என்ஐஏ குழுவினா், சம்பவ இடத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
அண்மையில், கான்பூா் கோவிந்த்புரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பொருளின் மீது மோதி சபா்மதி விரைவு ரயிலின் 24 பெட்டிகள் தடம்புரண்டன. இது சமூக விரோதிகளின் கைவரிசை என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
இந்நிலையில், தற்போதைய சம்பவம் குறித்து காவல்துறையினா் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்

ராமா் கோயில் நன்கொடை பணம் திருட்டு: எஸ்ஐடி விசாரணை

உ.பி.யில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து 6 தொழிலாளா்கள் உயிரிழப்பு

உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயா்வு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



