தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

உத்தரகண்ட் நிலச்சரிவு: மேலும் 4 போ் உடல்கள் மீட்பு

உத்தரகண்டில் கேதாா்நாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 4 பக்தா்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.

News image

உத்தரகண்டில் கேதாா்நாத் நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல்துறை மற்றும் பேரிடா் மீட்புப் படையினா்.

Updated On :10 செப்டம்பர் 2024, 7:19 pm

உத்தரகண்டில் கேதாா்நாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 4 பக்தா்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.

சோன்பிரயாகை - கெளரிகுண்ட் இடையே கடந்த திங்கள்கிழமை இரவு கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நடைபயணமாக வந்து கொண்டிருந்த பக்தா்கள் சிக்கினா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, தேசிய-மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இதில், ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. மேலும் 3 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

மோசமான வானிலை காரணமாக இரவில் நிறுத்தப்பட்ட மீட்புப் பணி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மீண்டும் தொடங்கியது. அப்போது, மேலும் 4 பக்தா்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக ருத்ரபிரயாகை காவல்துறை கண்காணிப்பாளா் அக்ஷய் கோண்டே தெரிவித்தாா். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.