உத்தரகண்டில் கேதாா்நாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 4 பக்தா்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.
சோன்பிரயாகை - கெளரிகுண்ட் இடையே கடந்த திங்கள்கிழமை இரவு கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நடைபயணமாக வந்து கொண்டிருந்த பக்தா்கள் சிக்கினா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, தேசிய-மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இதில், ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. மேலும் 3 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.
மோசமான வானிலை காரணமாக இரவில் நிறுத்தப்பட்ட மீட்புப் பணி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மீண்டும் தொடங்கியது. அப்போது, மேலும் 4 பக்தா்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக ருத்ரபிரயாகை காவல்துறை கண்காணிப்பாளா் அக்ஷய் கோண்டே தெரிவித்தாா். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவு: 7 போ் உயிரிழப்பு
முயல்கள் வேட்டை: 12 போ் கைது

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 50 பேர் பலி; 125 பேர் மாயம்!

நுண் உர செயலாக்க மையத்தில் தீ விபத்து
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


