கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

செவிலியர்களுக்கு ‘ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’: குடியரசுத் தலைவர் வழங்கினார்!

சிறந்த சேவையைப் பாராட்டி 15 செவிலியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கினார்.

News image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவுடன் விருது பெற்ற செவிலியர்கள்

Updated On :11 செப்டம்பர் 2024, 2:10 pm

DIN

சமூகத்திற்கான கடமை மற்றும் சேவையில் சிறந்த அர்ப்பணிப்புக்காக 15 செவிலியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை விருது வழங்கினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செவிலியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, இந்தப் பாராட்டு செவிலியர்களுக்கு பொது சேவை பணியாற்ற ஊக்குவிக்கும் என்றும், செவிலியர்கள் "சுகாதாரத் துறையின் முதுகெலும்பு" என்றும் கூறினார்.

தேசிய ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது, 1973 ஆம் ஆண்டு இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால், செவிலியர்கள், சமூகத்திற்கு ஆற்றிய சிறந்த சேவைகளுக்கான அங்கீகாரத்தின் அடையாளமாக உருவாக்கப்பட்டது.

மத்திய, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறந்த செவிலியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

மருத்துவமனை அல்லது சமூக அமைப்புகள், கல்வி அல்லது நிர்வாக அமைப்பில் வழக்கமான வேலையில் இருக்கும் செவிலியர் தேசிய ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுக்கு தகுதியானவர்.

செவிலியர்களுக்கு விருதுடன், சான்றிதழ், ரூ.1,00,000 ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.