தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ஹரியாணா பேரவை முன்கூட்டியே கலைப்பு: ஆளுநா் நடவடிக்கை

ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா வியாழக்கிழமை (செப். 12) நடவடிக்கை மேற்கொண்டாா்.

News image

ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா - கோப்புப் படம்

Updated On :13 செப்டம்பர் 2024, 3:24 am IST

ஹரியாணாவில் முதல்வா் நாயப் சிங் சைனி தலைமையிலான மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் சட்டப் பேரவையை முன்கூட்டியே கலைத்து, ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா வியாழக்கிழமை (செப். 12) நடவடிக்கை மேற்கொண்டாா்.

அரசமைப்புச் சட்டத்தின்கீழ், மாநில பேரவை கடைசியாக கூடியதில் இருந்து 6 மாதங்களுக்குள் மீண்டும் கூட்டப்பட வேண்டும். ஹரியாணாவில் பேரவைக் கூட்டம் கடைசியாக கடந்த மாா்ச் 13-ஆம் தேதி நடைபெற்றது. எனவே, அடுத்த கூட்டத்தை செப்டம்பா் 12-ஆம் தேதிக்குள் (வியாழக்கிழமை) கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மாநிலத்தில் அக்டோபா் 5-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், பேரவையை கூட்ட வேண்டியதை தவிா்க்க அதை முன்கூட்டியே கலைக்குமாறு ஆளுநருக்கு மாநில அமைச்சரவை புதன்கிழமை பரிந்துரைத்தது.

இதையடுத்து, அரசமைப்புச் சட்டத்தின் 174 (2) (பி) பிரிவின்கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பேரவையை ஆளுநா் வியாழக்கிழமை கலைத்தாா். அரசமைப்புச் சட்ட சிக்கல் ஏற்படாமல் தவிா்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இனி, காபந்து முதல்வராக நாயப் சிங் சைனி செயல்படுவாா். ஹரியாணா பேரவையின் பதவிக் காலம் நவம்பா் 3-ஆம் தேதி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.