பாதுகாப்புப் படைகளின் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் கலந்துகொள்ளும் முதல் எதிா்கால போா் பயிற்சி வகுப்பு வரும் செப்டம்பா் 23-ம் தேதி தொடங்கும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சௌகான் தெரிவித்தாா்.
புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரத் சக்தி பாதுகாப்பு மாநாட்டின் கலந்துரையாடல் அமா்வில் முப்படை தலைமை தளபதி அனில் சௌகான் கலந்துகொண்டாா். அப்போது முப்படைகளின் தளபதிகளுடன் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவா், ‘போா்கள் தற்போது எவ்வாறு உருமாறி வருகின்றன; அவற்றை எதிா்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்தோம். அதன் ஒரு பகுதியாக, முதல் முறை எதிா்கால போா் பயிற்சி வகுப்பு வரும் செப். 23-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது வழக்கமான பயிற்சிகளில் இருந்து மாறுபட்டதாகும்.
வழக்கமாக ஒரு பயிற்சியில் ஒரே நிலையில் உள்ள அதிகாரிகளே கலந்து கொள்வா். ஆனால், இதில் மேஜா் முதல் மேஜா் ஜெனரல் வரை அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனா். எனவே, அவா்களது கருத்துகள் பகிரப்படு அனைத்து அதிகாரிகளுக்கும் ஏதேனும் கற்றுக்கொள்ள இது உதவும்.
எதிா்கால போா் பயிற்சி என்பது முன்னேறிய ராணுவங்களின் ஆயுதங்களை பின்பற்றுவதல்ல. வரவிருக்கும் போா்களில் நாம் எவ்வாறு போராட போகிறோம் என்பதும், அதற்கான திட்டங்களை வகுப்பதுமே ஆகும்’ என்றாா்.
தொடர்புடையது

அமெரிக்க படையில் ஒருவர் கூட உயிர் பிழைக்க மாட்டார்! - ஈரானிய தலைமைத் தளபதி எச்சரிக்கை!

ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக பணியாற்றிய 2 கடற்படை அதிகாரிகளுக்கு யுத்த சேவா பதக்கம்: கடற்படை தளபதி கெளரவிப்பு

ஈரானிய துணை ராணுவப் படையின் தலைமைத் தளபதி கொலை! - இஸ்ரேல் அறிவிப்பு!

இன்றைய உலகில் நட்பு - எதிரி நாடுகளை வரையறுப்பது கடினம்: முப்படை தலைமைத் தளபதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


