சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வெற்றி: ராகுல், உதயநிதி வாழ்த்து!

செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு ராகுல், உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளனர்

News image

செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற இந்திய வீரர்கள் - X | Rahul Gandhi

Updated On :22 செப்டம்பர் 2024, 8:44 pm IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு ராகுல், உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில், 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதிச் சுற்றுக்கானப் போட்டியில் இன்று (செப். 22) நடைபெற்ற ஸ்லோவேனியா அணிக்கு எதிரானப் போட்டியில், ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியை இந்திய அணி சமன் செய்த நிலையில், இந்திய அணி வெற்றி பெற்று தங்கம் வென்றனர்.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல், தனது எக்ஸ் பக்கத்தில் ``செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில் இந்திய அணி தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். குகேஷ், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, ஸ்ரீநாத் நாராயணன் மற்றும் அவர்களின் குழுக்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்.

உங்களின் திறமை, புத்திசாலித்தனமான உத்திகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை பலனளித்து விட்டன. நீங்கள் அனைவரும் தொடர்ந்து சிறந்த வெற்று பெற்று விளங்க வாழ்த்துகிறேன். உங்கள் பொன்னான வெற்றி, நாட்டையே பெருமையடையச் செய்துள்ளது’’ என்று வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் ``ஹங்கேரியில் 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், இந்திய அணி மீண்டும் சதுரங்கத்தில் தனது புகழை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிச் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்த வரலாற்று வெற்றியை உறுதி செய்த தமிழகத்தின் பெருமையான குகேஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோருக்கு ஒரு சிறப்பு கைதட்டல்.

பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, ஹரிகிருஷ்ணா மற்றும் கேப்டன் ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோர் அடங்கிய முழு குழுவையும் நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த அற்புதமான சாதனைக்கு நமது இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்’’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.