தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வெற்றி: ராகுல், உதயநிதி வாழ்த்து!

செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு ராகுல், உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளனர்

News image

செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற இந்திய வீரர்கள்

X | Rahul Gandhi

Updated On :22 செப்டம்பர் 2024, 3:14 pm

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு ராகுல், உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில், 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதிச் சுற்றுக்கானப் போட்டியில் இன்று (செப். 22) நடைபெற்ற ஸ்லோவேனியா அணிக்கு எதிரானப் போட்டியில், ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியை இந்திய அணி சமன் செய்த நிலையில், இந்திய அணி வெற்றி பெற்று தங்கம் வென்றனர்.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல், தனது எக்ஸ் பக்கத்தில் ``செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில் இந்திய அணி தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். குகேஷ், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, ஸ்ரீநாத் நாராயணன் மற்றும் அவர்களின் குழுக்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்.

உங்களின் திறமை, புத்திசாலித்தனமான உத்திகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை பலனளித்து விட்டன. நீங்கள் அனைவரும் தொடர்ந்து சிறந்த வெற்று பெற்று விளங்க வாழ்த்துகிறேன். உங்கள் பொன்னான வெற்றி, நாட்டையே பெருமையடையச் செய்துள்ளது’’ என்று வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் ``ஹங்கேரியில் 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், இந்திய அணி மீண்டும் சதுரங்கத்தில் தனது புகழை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிச் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்த வரலாற்று வெற்றியை உறுதி செய்த தமிழகத்தின் பெருமையான குகேஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோருக்கு ஒரு சிறப்பு கைதட்டல்.

பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, ஹரிகிருஷ்ணா மற்றும் கேப்டன் ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோர் அடங்கிய முழு குழுவையும் நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த அற்புதமான சாதனைக்கு நமது இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்’’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.