
தில்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள அதிஷி தலைமையில் முதல்முறையாக இன்று (செப். 24) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
தில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அதிஷி பதிவிட்டுள்ளதாவது, தில்லி மக்களுக்கானது எங்கள் அரசு.
புதிதாக பொறுப்பேற்றுள்ள சூழலில், அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, தில்லி மக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். அரவிந்த் கேஜரிவாலின் இலக்கை நிறைவேற்றுவோம் எனப் பதிவிட்டுள்ளார்.
मà¥à¤à¥à¤¯à¤®à¤à¤¤à¥à¤°à¥ à¤à¤¾ पदà¤à¤¾à¤° सà¤à¤à¤¾à¤²à¤¨à¥ à¤à¥ बाद à¤à¤ सà¤à¥ à¤à¥à¤¬à¤¿à¤¨à¥à¤ à¤à¥ साथियà¥à¤ à¤à¤° दिलà¥à¤²à¥ सरà¤à¤¾à¤° à¤à¥ विà¤à¤¾à¤à¥à¤ à¤à¥ पà¥à¤°à¤®à¥à¤à¥à¤ à¤à¥ साथ बà¥à¤ ठà¤à¥à¥¤
— Atishi (@AtishiAAP) September 24, 2024
सरà¤à¤¾à¤° à¤à¥ रà¥à¤ª मà¥à¤ हमारॠà¤à¤µà¤¾à¤¬à¤¦à¥à¤¹à¥ दिलà¥à¤²à¥ à¤à¥ लà¥à¤à¥à¤ à¤à¥ पà¥à¤°à¤¤à¤¿ हà¥à¥¤ à¤à¤¸à¥ मà¥à¤ सà¤à¥ à¤à¤§à¤¿à¤à¤¾à¤°à¤¿à¤¯à¥à¤ à¤à¥ सहयà¥à¤ à¤à¥ साथ हम दिलà¥à¤²à¥ à¤à¥ लà¥à¤à¥à¤ à¤à¥ बà¥à¤¹à¤¤à¤° सà¥à¤µà¤¿à¤§à¤¾à¤à¤ दà¥à¤¨à¥ à¤à¥ लिठमिलà¤à¤° à¤à¤¾à¤®â¦ pic.twitter.com/8cztgRMwkw
கூட்டத்தில் பேசிய அவர், தில்லி மக்களின் வரியை நம்பியே அரசு உள்ளது. எனவே அவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கும், நேர்மையுடன் பொறுப்புகளை நிறைவேற்றுவதும் ஆளும் கட்சியின் பொறுப்பு.
அரசின் சேவைகள் மாநிலத்தின் கடைசி நபரையும் சென்றடைவதை உறுதி செய்வதும், அவை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடப்பதை உறுதி செய்வதும் நமது கடமை.
இதில், அரசு மற்றும் அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்கள் அனைவரும் அரசு சேவைகளைப் பெற்று, கண்ணியத்துடன் வாழ வழிவகை செய்வோம் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






