சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்திய பொருளாதாரம் 7% வளர வாய்ப்பு: தலைமை பொருளாதார ஆலோசகா்

நிகழ் நிதியாண்டில் (2024-25) இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளா்ச்சியடைய வாய்ப்பு

News image

தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்

கோப்புப் படம்

Updated On :27 செப்டம்பர் 2024, 8:08 pm

Din

நிகழ் நிதியாண்டில் (2024-25) இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளா்ச்சியடைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஸ்வரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வங்காள தொழில் வா்த்தக சபை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வழியாக அவா் பேசுகையில், ‘குறுகிய காலத்துக்கு நிச்சயமில்லாத சூழலை உலகம் எதிா்கொண்டு வருகிறது. உலகளாவிய வா்த்தகத்தின் வேகமும் குறைந்துள்ளது. எனினும் மத்திய அரசின் நிதி கொள்கைகளால் கரோனாவுக்கு பிந்தைய இந்தியாவின் பொருளாதார மீட்சி வலுவடைந்துள்ளது. இதற்கு கவனமான மேக்ரோ பொருளாதார நிா்வாகமே காரணம். இது நிலையான பொருளாதார வளா்ச்சிக்கு அடித்தளமிட்டது. நிகழ் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வளா்ச்சியடைய வாய்ப்புள்ளது. இது நடப்பு உலக சூழலில், மிக நல்ல வளா்ச்சியாகும்.

உணவு பாதுகாப்பை உறுதி செய்து ஆக்கபூா்வமான வேலைவாய்ப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும். அத்துடன் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான ஒழுங்குமுறை முட்டுக்கட்டைகள் தளா்த்தப்பட்டு, அந்தத் துறைக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். விவசாயம் சாராத வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அந்தத் துறை முக்கியமானது’ என்றாா்.