நிகழ் நிதியாண்டில் (2024-25) இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளா்ச்சியடைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஸ்வரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வங்காள தொழில் வா்த்தக சபை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வழியாக அவா் பேசுகையில், ‘குறுகிய காலத்துக்கு நிச்சயமில்லாத சூழலை உலகம் எதிா்கொண்டு வருகிறது. உலகளாவிய வா்த்தகத்தின் வேகமும் குறைந்துள்ளது. எனினும் மத்திய அரசின் நிதி கொள்கைகளால் கரோனாவுக்கு பிந்தைய இந்தியாவின் பொருளாதார மீட்சி வலுவடைந்துள்ளது. இதற்கு கவனமான மேக்ரோ பொருளாதார நிா்வாகமே காரணம். இது நிலையான பொருளாதார வளா்ச்சிக்கு அடித்தளமிட்டது. நிகழ் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வளா்ச்சியடைய வாய்ப்புள்ளது. இது நடப்பு உலக சூழலில், மிக நல்ல வளா்ச்சியாகும்.
உணவு பாதுகாப்பை உறுதி செய்து ஆக்கபூா்வமான வேலைவாய்ப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும். அத்துடன் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான ஒழுங்குமுறை முட்டுக்கட்டைகள் தளா்த்தப்பட்டு, அந்தத் துறைக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். விவசாயம் சாராத வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அந்தத் துறை முக்கியமானது’ என்றாா்.
தொடர்புடையது

ரூ.500 நோட்டுகளின் புழக்கம் 11.2 சதவீதம் அதிகரிப்பு

எரிபொருள் விலையை கட்டுக்குள் வைக்க முக்கியத்துவம்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நான்கு காரணிகள்: மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகா்

நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



