நாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

உத்தரகண்ட் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்

உத்தரகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமி செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 2:43 pm IST

உத்தரகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்ற பொது சிவில் சட்டம் வழியமைக்கும் என்று கூறப்படுகிறது.

நாட்டில் முதல் மாநிலமாக பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக உத்தரகண்ட் சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை கூட்டப்பட்டது.

இன்று காலை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்யும்போது பேரவையில் இருந்த பாஜக எம்எல்ஏ “வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பிற்பகல் 2 மணிவரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று பிற்பகல்முதல் மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, நாளை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, உத்தரகண்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 போ் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்தது.

அந்தக் குழு 740 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமியிடம் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தது. தொடர்ந்து, உத்தரகண்ட் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.