ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புத்தாண்டு: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

மகரவிளக்கு பூஜைக்காக 2 நாள்களுக்கு முன்னதாக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:26 am

மகரவிளக்கு பூஜைக்காக 2 நாள்களுக்கு முன்னதாக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, நிர்மால்ய பூஜையுடன், 18,018 தேங்காய்களில் நெய் அபிஷேகம் செய்யப்பட்டது.  
தலைமை அர்ச்சகர் பி.என்.மகேஷ் நம்பூதிரி தலைமையில், தந்திரி (தலைமை அர்ச்சகர்) கண்டரரு மகேஷ் மோகனரரு மேற்பார்வையில் நெய்யபிஷேகம் நடைபெற்றது.

புத்தாண்டையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று காலை முதல் ஏராளமானோர் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால்,டிஐஜி தாம்சன் ஜோஸ், சன்னிதானம் சிறப்பு அதிகாரி ஆர் ஆனந்த் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை சனிக்கிழமை மாலை திறக்கப்பட்டது. ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு விழாவை முன்னிட்டு ஜனவரி 13, 14ல் பல்வேறு சடங்குகள் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) தெரிவித்துள்ளது. 

மகரவிளக்கு நாளில் சன்னிதானத்தில் (கோயில் வளாகம்) திருவாபரணம் (புனித ஆபரணங்கள்) மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட தீபாராதனை ஆகியவற்றை பக்தர்கள் தரிசிப்பார்கள்.

மகரவிளக்கு தரிசனத்துக்குப் பிறகு, ஜனவரி 20 ரை மலைக் கோயில் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.