மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

சந்திரசேகா் ராவை சந்தித்து நலம் விசாரித்தார் ஜெகன்மோகன் ரெட்டி!

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆா்எஸ்) தலைவா் சந்திரசேகா் ராவை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஓய்.எஸ்.ஜெகன் மோகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

News image

சந்திரசேகா் ராவை சந்தித்தார் ஜெகன்மோகன் ரெட்டி

Updated On :4 ஜனவரி 2024, 2:14 pm IST

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆா்எஸ்) தலைவா் சந்திரசேகா் ராவை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஓய்.எஸ்.ஜெகன் மோகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

தெலங்கானா மாநில முன்னாள் முதல்வரும் பிஆா்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகா் ராவ் அவரது பண்ணை வீட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு இடப்பக்க இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

Story image

சிகிச்சை முடிந்து டிசம்பர் 15ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சந்திரசேகர் ராவ். இந்த நிலையில் தலைவர்கள் பலரும் அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். 

இந்த நிலையில்,  நந்தி நகரில் உள்ள தெலங்கானா முன்னாள் முதல்வரின் இல்லத்திற்குச் சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேசிஆர்யை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

கேசிஆர்யின் மகனும் பிஆர்எஸ் செயல் தலைவருமான கே.டி.ராமராவ் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் ரெட்டியை வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.