ராஜஸ்தானில் கரண்பூா் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் அம்மாநில அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வியை தழுவினார்.
ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் கரண்பூரைத் தவிர 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பரில் தேர்தல் நடைபெற்றது. கரண்பூர் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் மரணத்தை தொடர்ந்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்தலில் 115 இடங்களில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வா் பஜன்லால் சா்மா தலைமையில் புதிய அரசு அண்மையில் பதவியேற்றது.
இந்நிலையில், கரண்பூா் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தோ்தலில் பாஜக சாா்பில் மாநில அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சுரேந்திர பால் சிங், காங்கிரஸ் தரப்பில் குா்மீத் சிங்கின் மகன் ரூபிந்தா் சிங் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை விட 12,750 வாக்குகள் குறைவாக பெற்று பாஜக வேட்பாளரும் மாநில அமைச்சருமான சுரேந்திர பால் சிங் தோல்வியை சந்தித்துள்ளார்.
இந்த தோல்வியால் ராஜஸ்தான் அமைச்சர் பதவியை சுரேந்திர பால் சிங் இழந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

ரூ. 1 கோடிக்கு புதிய பி.எம்.டபிள்யூ கார் அறிமுகம்! 5 விநாடிகளில் 100 கி.மீ. வேகம்!!

தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி: முதல்வர் விஜய்
விடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

புஷ்பா பட பாணியில் வந்து இறங்கிய SOFA..! | உதயநிதி கடும் விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
