பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளின் முன்கூட்டிய விடுதலை ரத்து; 2 வாரங்களுக்குள் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.









