ராமர் கோயில் பிரதிஷ்டை நாளில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு! 

ராமர் கோயில் திறப்பு விழா நாளன்று அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)
யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)

ராமர் கோயில் திறப்பு விழா நாளன்று அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு, அதன் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அக்கோயிலின் மூலவர் பிரதிஷ்டை விழா வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 25,000 ஹிந்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக 10,000 பேர் பங்கேற்க உள்ளனர். 

இந்நிலையில் ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை செய்யப்படும் நாளான ஜனவரி 22 (திங்கள்கிழமை) அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது உத்தரப் பிரதேச மாநில அரசு.

மேலும், இதனை 'தேசிய விழா' என்று குறிப்பிட்டுள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜனவரி 22-ம் தேதி மது விற்பனைக்கும் தடை விதித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com