25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

இந்து புராணப் பெயர்களைக் குழந்தைகளுக்கு வைக்க வேண்டும்: அயோத்தி தீர்த்தர்

கோயிலைக் கட்டுவதை விட அதனை பராமரிப்பதே பெரிய பணி என மூத்த அறக்கட்டளை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:52 pm IST

அயோத்தி ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை நிகழ்வையொட்டி அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர், இந்து புராணங்களில் இருந்து குழந்தைகளுக்கு பெயர் வைக்குமாறும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லவும் வலியுறுத்தியுள்ளார்.

சுவாமி விஷ்வபிரசன்ன தீர்த்தர், அறக்கட்டளையின் உறுப்பினர் பேசும்போது கோயிலைக் கட்டுவதை விட அதனை பராமரிப்பதே பெரிய பணி எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

நூற்றாண்டாக கண்ட கனவு நிறைவேறியுள்ளது. ஆனால் அதனால் பொறுப்பு முடிந்துவிடவில்லை. கோயிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது இருக்க நாம் சிந்திக்க வேண்டும். நமது குழந்தைகள் இந்துக்களாக இருக்கும்வரை இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரை இந்தக் கோயில் அப்படியே இருக்கும். ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலைகளுக்கு என்னவானது எனப் பார்க்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.

மேலும், இந்து புராணங்கள், இதிகாசங்களில் இருந்து குழந்தைகளுக்குப் பெயர் வைக்கவேண்டும் எனவும் கலாச்சாரத்தை தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலவர் பிரதிஷ்டை நிகழ்வுக்குப் பிறகு 48 நாள்கள் மண்டல பூஜை நடக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி, கலியுகத்தில் (நவீன யுகம்) இருந்து திரேத யுகத்துக்கு (ராமர் யுகம்) மாறியுள்ளதாக அவர் கோயில் திறப்பு விழாவைக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.