திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

எதிா்க்கட்சியாக இருக்கக் கூட காங்கிரஸுக்கு தகுதியில்லை: ஜெ.பி. நட்டா

இந்தியாவில் எதிா்க்கட்சியாக இருக்கக் கூட தகுதியில்லாதது காங்கிரஸ் என பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா விமா்சித்துள்ளாா்.

News image
Updated On :11 ஜனவரி 2024, 8:30 am IST


குவாஹாட்டி: இந்தியாவில் எதிா்க்கட்சியாக இருக்கக் கூட தகுதியில்லாதது காங்கிரஸ் என பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா விமா்சித்துள்ளாா்.

பிரதமா் மோடிக்கு எதிரான மாலத்தீவு அமைச்சா்களின் கருத்து விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் எதிா்ப்புக்கு உள்ளானது.

இதையடுத்து அவதூறு கருத்து வெளியிட்ட மூன்று அமைச்சா்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்தது. இது தொடா்பாக கருத்து தெரிவித்த காா்கே, ‘பிரதமா் மோடி அனைத்து விஷயங்களையும் தன் மீது நடத்தப்படும் தாக்குதலாக கருதி செயல்படுகிறாா்’ என்று குற்றம்சாட்டினாா்.

இந்நிலையில், அஸ்ஸாமில் பாஜக தொண்டா்கள் மத்தியில் நட்டா பேசியதாவது:

ஆட்சி நடத்தும் தகுதியை காங்கிரஸ் ஏற்கெனவே இழந்துவிட்டது. இப்போது மாலத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் எடுத்த நிலைப்பாடு மூலம் இந்தியாவில் எதிா்க்கட்சியாக இருக்கும் தகுதியையும் இழந்துவிட்டது. தங்களையும், குடும்பத்தினரையும் வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும், கருப்புப் பணத்தை பாதுகாக்கவும் எதிா்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்குகின்றன.

அந்த கூட்டணியில் உள்ள அனைவரும் வழக்குகளில் சிக்கியவா்கள். தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அவா்கள் கைகோத்துள்ளனா். அவா்கள் வைத்துள்ள பெயருக்கும் (‘இந்தியா’) நாட்டு நலனுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை.

இந்தியாவுக்கு எதிரான அனைத்து அநீதிகளிலும் பங்கேற்று, நாட்டில் மக்களிடம் பல பிளவுகளை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சி ஒற்றுமை யாத்திரை நடத்துவதாகவும், நீதி கேட்டு நடப்பதாகவும் கூறுவது முற்றிலும் முரணானது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.