ஜெய்ப்பூர்: உதய்பூரிலிருந்து ரூ.2.38 கோடி மதிப்புள்ள ஏற்றுமதிக்கான துணிகளை இரண்டு பேர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டி ஓபேரி சுங்கச்சாவடி அருகே இந்த கொள்ளையை நடத்திவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ததாக ராஜஸ்தான் காவல்துறையினர் இன்று தெரிவித்தனர்.
இது குறித்து உதய்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் புவன் பூஷண் யாதவ் தெரிவித்ததாவது:
நேற்று முன்தினம் இரவு நொய்டாவிலிருந்து நவி மும்பையின் துரோணகிரிக்கு ஏற்றுமதி செய்வதற்கான ரூ.2.38 கோடி மதிப்புள்ள துணிகளை ஏற்றிக்கொண்டு லாரியில் உதவியாளருடன் புறப்பட்டதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளதாக தெரிவித்த காவல் துறை கண்காணிப்பாளர், நேற்று (வியாழக்கிழமை) மாலை கண்டி ஓபேரி சுங்கச்சாவடி அருகே லாரியின் முன் பைக்கை நிறுத்திய 2 பேர், ஓட்டுநர் மற்றும் உதவியாளரை கட்டையால் மிரட்டி கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த நிலையில், காவல்துறையின் சிறப்பு குழு குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ததாக தெரிவித்த புவன் பூஷண் யாதவ், அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரிலிருந்து சீல் வைக்கப்பட்ட நிலையில் துணிகளும், கொள்ளைக்கு பயன்படுத்திய பைக்கையும் மீட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

