அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நொய்டாவில் ஜன.18 முதல் பள்ளி நேரம் மாற்றம்!

அதிக குளிர் காலநிலை நிலவி வருவதன் காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜன.18 முதல் காலை 10 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :17 ஜனவரி 2024, 6:41 am

DIN

அதிக குளிர் காலநிலை நிலவி வருவதன் காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜன.18 முதல் காலை 10 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நொய்டாவில் கடந்த ஒரு மாதமாக அதிகப்படியான குளிர் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும் வரை காலை 10 மணிக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என கௌதம் புத்த நகர் கல்வி அதிகாரி ராகுல் பன்வார் தெரிவித்தார். இந்த உத்தரவை அமல்படுத்தப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக, 9 முதல் 12 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு பள்ளி நேரம் கடந்த வாரம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மாற்றப்பட்டுள்ளது. தற்போது குளிர் காலநிலை காரணமாக ஜனவரி 18 நர்சரி முதல் 8-ம் வகுப்புகள் வரை நேரம் மாற்றப்பட்டுள்ளது. 

நொய்டாவில் உள்ள அரசுப் பள்ளிகள் பொதுவாக குளிர்காலத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கால அட்டவணையைப் பின்பற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.