பாட்னா: பிகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையில் ராஷ்டிரியா ஜனதா தளக் கட்சியின் தலைவர்கள், கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சந்திப்புக்காகக் கூடியுள்ளனர்.
மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் மஹாகத்பந்தன் கூட்டணியில் இருந்து நிதீஷ் குமார் விலகவுள்ளதாக வெளியான தகவலினால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
லாலு பிரசாத் யாதவின் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மனைவி ராப்ரி தேவி, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
நிதீஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறினால் காங்கிரஸ், மூன்று இடதுசாரி கட்சிகள், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் சேர்த்தாலும் பெரும்பான்மை வகிக்க 8 எம்எல்ஏக்கள் குறைவாக இருப்பர்.
இதையும் படிக்க: பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கூட்டணி மாறும் வரலாறு
இந்தக் குழப்பங்கள் குறித்து விவாதிக்க ராஷ்டிரிய ஜனதாவின் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


