/

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்: 2 நாள்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடக்கம்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் இரு நாள்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று(ஜன. 28) மீண்டும் தொடங்கியுள்ளது.

News image

காரில் அமர்ந்தபடி மக்களுடன் கைகுலுக்கும் ராகுல் காந்தி

Updated On :7 பிப்ரவரி 2024, 8:42 pm IST

புது தில்லி : மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியிலிருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் இரு நாள்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று(ஜன. 28) மீண்டும் தொடங்கியுள்ளது.

இதற்காக புதுதில்லியிலிருந்து, இன்று(ஜன.28) காலை, மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள  பாக்தோக்ரா விமான நிலையம் வந்தடைந்த ராகுல் காந்தி, தொடர்ந்து   சாலை மார்க்கமாக காரில் பயணித்தார்.  அப்போது,  காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி, சாலையின் இருபுறமும் சூழந்திருந்த மக்களை பார்த்து கையசைத்தபடி பயணித்தார். அவருடன் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி உடனிருந்தார். 

மணிப்பூரில் இம்மாதம் 14-ஆம் தேதி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, அசாம் வழியாக கடந்த 25-ஆம் தேதி மேற்கு வங்கம் சென்றடைந்தார்.  அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் ஓய்வுக்குப் பின் இன்று(ஜன.28) மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.