கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கடவுளை நம்பமாட்டோம்: மக்களை உறுதிமொழி ஏற்கவைத்த தலைமை ஆசிரியர் கைது!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இந்துக் கடவுள்களை நம்பமாட்டோம் என மக்களை உறுதிமொழி ஏற்கவைத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :29 ஜனவரி 2024, 8:22 am

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இந்துக் கடவுள்களை நம்பமாட்டோம் என மக்களை உறுதிமொழி ஏற்கவைத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பராரி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியின் ஆசிரியராக நியமிக்கப்பட்டவர் ரதலால் சரோவர்(60), இவர் மாவட்ட கல்வி அதிகாரியால் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த ஜனவரி 22 அன்று அயோத்தி கோயிலில் சிலை பிரதிஷ்டை நடைபெற்றபோது, சரோவர், ரத்தன்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மொங்ஹதராய் கிராமத்தில் மாணவர்கள் உள்பட ஒரு குழுவைக் கூட்டியுள்ளார் தலைமை ஆசிரியர். 

அந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் சிவன், ராமர், கிருஷ்ணர் உள்ளிட்ட இந்துக் கடவுள்களை வழிபடக்கூடாது, புத்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என மக்களை உறுதிமொழி ஏற்கவைத்ததாக வலதுசாரி அமைப்பின் அதிகாரி ரூபேஷ் சுக்லா புகார் அளித்தார். 

சரோவரின் இந்த உறுதிமொழி விடியோ மூலம் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, ஸனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.