நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை லிட்டராவது அருந்திவிடுவார்கள்.
சரி.. அடுத்து அதாவது தண்ணீருக்கு அடுத்து மக்கள் அதிகம் குடிக்கும் பானமாக இருப்பது எது தெரியுமா? பலரும் இன்று வரை விட முடியாமல் தவிக்கும் பானம்தான் அது. தேநீர்.
இந்த தேநீர் கண்டுபிடிக்கப்பட்டது என்னவோ 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால், இன்று வரை அதற்கு கோடிக்கணக்கான அடிமைகள் இருக்கிறார்கள். எதேச்சையாக ஒரு விவசாயி, குடிக்கும் தண்ணீரில் தேயிலை இலைகளைப் போட்டு கொதிக்க வைத்தபோது அதிலிருந்து வந்த மணம்தான் தேநீர் கண்டுபிடிக்க உதவியதாகவும், இல்லை இல்லை, சீனாவின் பேரரசர் ஷென்னோங் தான், தேநீரை கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் இவர்தான் தேநீரைக் கண்டுபிடித்தவர் என்று உறுதிபடக் கூறிவிட்டால் அவருக்கு ஆலயம் கட்டக் காத்திருப்பவர்கள் ஏராளம்.
காரணம், உலகளவில் தண்ணீருக்கு அடுத்த படியாக அதாவது உலக மக்களால் அதிகம் குடிக்கப்படும் பானமாக தேநீர் உள்ளது என்பது இதனை உறுதி செய்கிறது.
முதலில், தேநீர் என்பதை உடல்நலக் குறைவின்போது கொடுக்கும் மருந்தாகவே மக்கள் பயன்படுத்தினர். பிறகு அதன் ருசி பிடித்துப்போனதால், தேநீர் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
பொதுவாக பழச்சாறு, குளிர்பானங்கள் என்றால் அளவில் அதிகமாக மக்கள் பருகும் நிலையில், ஒரு டம்ளரில் சிறிய அளவில் குடிக்கும் தேநீர், மற்ற பானங்களை எல்லாம் முந்தியிருப்பதே மகிழ்ச்சியை அளிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நம்பகத்தன்மையே சொத்து!

தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?

என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?

செம்பருத்தி தேநீர் பற்றி தெரியுமா?
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



