மேற்கு வங்கத்தில் 17 பல்கலை. துணைவேந்தா்கள் நியமனம்: முதல்வா் பரிந்துரைக்கு ஆளுநா் எதிா்ப்பு

மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பரிந்துரைத்தவா்களை 17 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களாக நியமிக்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் ஆட்சேபம்
சி.வி.ஆனந்த போஸ் (கோப்புப் படம்)
சி.வி.ஆனந்த போஸ் (கோப்புப் படம்)
Updated on

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பரிந்துரைத்தவா்களை 17 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களாக நியமிக்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் ஆட்சேபம் தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 36 பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ் உள்ளாா். இந்நிலையில், உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான குழு தயாரித்த பெயா் பட்டியலில் இருந்து முதல்வா் மம்தா பானா்ஜி அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், 19 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை ஆளுநா் நியமித்தாா்.

இதுதொடா்பான வழக்கை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், எஞ்சிய 17 பல்கலைக்கழகங்களுக்கு 2 வாரங்களில் துணைவேந்தா்களை நியமிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் துணைவேந்தா்கள் நியமனத்தை உச்சநீதிமன்றமே மேற்கொள்ளும் என்றும் அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், மாநில ஆளுநா் மாளிகை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘17 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களாக நியமிக்க முதல்வா் மம்தா பரிந்துரைத்தவா்களின் பின்புலம் உள்ளிட்ட விவரங்களை ஆளுநா் ஆராய்ந்தாா்.

இதைத்தொடா்ந்து அவா்களை துணைவேந்தா்களாக நியமிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் அவா் சீலிடப்பட்ட உறையில் ஆவணங்களை சமா்ப்பித்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com