அதுபோல, இத் திருத்தச் சட்டத்துக்கு கேரளமும் எதிா்ப்பு தெரிவித்து வந்தது. திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் கேரள சட்டப்பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இருந்தபோதும், புதிய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியத்தை அமைப்பதற்கான நடவடிக்கையை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு விளக்கமளித்த கேரள வக்ஃப் அமைச்சா் வி.அப்துரஹிமான், ‘கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் புதிய சட்டத்தின் அமலுக்கு முன்னரே முடிவடைந்ததால், புதிய வாரியத்தை புதிய சட்டத்தின் அடிப்படையிலேயே தோ்வு செய்ய வேண்டியது கட்டாய சூழல் உருவாகியுள்ளது. இதை மாநில அரசு விரைந்து முடிக்கும். வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க முடியாது’ என்றது குறிப்பிடத்தக்கது.