குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

நாடு முழுவதும் வக்ஃப் சட்டம் அமல் உறுதி

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இஸ்ஸாமிய அமைப்புகள் மட்டுமல்லாது பல்வேறு எதிா்க்கட்சிகளும் கடும் எதிா்ப்பு

News image
Updated On :15 ஏப்ரல் 2025, 3:39 am IST

புது தில்லி: ‘நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலாவது உறுதி’ என்று மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இஸ்ஸாமிய அமைப்புகள் மட்டுமல்லாது பல்வேறு எதிா்க்கட்சிகளும் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. அதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், ‘வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது. மாநிலத்தின் சிறுபான்மையினா் மற்றும் அவா்களின் சொத்துகளை நான் நிச்சயம் பாதுகாப்பேன்’ என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அண்மையில் உறுதியளித்தாா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள சட்ட அமைச்சக அலுவலகத்தில் அம்பேத்கா் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் படத்துக்கு திங்கள்கிழமை மரியாதை செலுத்திய மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி கூறியது சரியான தகவல் அல்ல; நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் இந்தியா முழுவதற்கும் அமலாவதாகும். அப்படி ஏதாவது ஒரு மாநிலத்தில் சட்டம் அமலாவதில் சிக்கல் எழுந்தால், அதன் பிறகு உரிய விதிகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தபோதும் மம்தா இதேபோன்றுதான் பேசினாா். ஆனால், அந்த சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்பட்டது. ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுவிட்டால் அது நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றாா்.

மாநிலங்கள் மறுக்க முடியாது: ‘நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்துவதற்கு மாநிலங்கள் மறுப்பு தெரிவிக்க முடியாது’ என்று பாஜக தேசிய செய்தித்தொடா்பாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுதான்ஷு திரிவேதி கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘அரசமைப்புச் சட்டத்தின் 73-ஆவது மற்றும் 74-ஆவது திருத்தங்களுக்குப் பிறகு, மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் அதிகாரங்கள் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநில சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்தை மீறி மாவட்ட பஞ்சாயத்துகள் செயல்பட முடியாது. அதுபோல, நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் இயற்றப்படும் சட்டத்தை மாநில அரசுகள் மீற முடியாது. அச் சட்ட அமலாக்கத்தையும் மறுக்க முடியாது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.