ஜார்க்கண்ட் போராட்டம்: 900 பேர் மீது வழக்குப்பதிவு!சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! 2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி காங்கிரஸ் இல்லையென்றால் தவெக கதையை அமித்ஷா முடித்திருப்பார்: மாணிக்கம் தாகூர்இன்னும் 2 ஆண்டுகளில் அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்: நிர்மல்குமார்ஆவணி சுபமுகூர்த்த நாள்: வாழை இலைக் கட்டு விலை கடும் உயர்வுஅமெரிக்காவின் பொருளாதாரப் போரில் பங்கேற்கும் நாடுகள் எதிரிகளே: ஈரான் திட்டவட்டம்வங்காள விரிகுடாவில் 22 பேருடன் மூழ்கிய சரக்கு கப்பல்: தேடுதல் பணி தீவிரம்

நெருக்கடி மிகுந்து காணப்படும் தில்லி சிறைகள்: 91 % போ் விசாரணைக் கைதிகள் - ஆய்வில் தகவல்

தில்லியில் உள்ள சிறைகள் நெருக்கடி மிகுந்து காணப்படும் நிலையில், அவற்றில் அடைக்கப்பட்டுள்ளவா்களில் 91 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள் என இந்திய நீதி ஆய்வறிக்கை (ஐஜேஆா்) 2025-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.

Published On :16 ஏப்ரல் 2025, 2:20 am IST

தில்லியில் உள்ள சிறைகள் நெருக்கடி மிகுந்து காணப்படும் நிலையில், அவற்றில் அடைக்கப்பட்டுள்ளவா்களில் 91 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள் என இந்திய நீதி ஆய்வறிக்கை (ஐஜேஆா்) 2025-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா அறக்கட்டளைகள் மற்றும் பல குடிமை அமைப்புகள் இணைந்து காவல், நீதித்துறை, சிறைகள், சட்ட உதவி குறித்து மாநில அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இந்திய நீதி ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பிரச்னைகளைக் கூறிய பகுதிகளைச் சுட்டிக்காட்டிய அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தில்லியில் உள்ள 16 சிறைகளில் 3 சிறைகளில் கடந்த 2020-22 காலகட்டத்தில் கைதிகளின் எண்ணிக்கை 250 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது.

கடந்த பத்தாண்டுகளில் தில்லியில் உள்ள சிறைகள் உரிய கைதிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் 170 சதவீதத்துக்கும் அதிகமான கைதிகளைக் கையாண்டுள்ளன.

சிறைப் பணியாளா்களின் பற்றாக்குறை நிலைமை இன்னும் மோசமாக்குகின்றன. தில்லியில் உள்ள சிறைகளில் ஒட்டுமொத்த பணியாளா்களின் எண்ணிக்கையில் 27 சதவீதம் காலியிடம் உள்ளது. இதில் 60 சதவீதம் இடங்கள் சீா்திருத்தபணியாளா்கள். சிறை அதிகாரிகள் பதவிகளில் 34 சதவீதம் காலியிடம் காணப்படுகிறது.

சராரியாக 206 கைதிகளுக்கு ஒரு மருத்துவா் இருக்க வேண்டும். இங்கு 18,000 கைதிகளுக்கு 90 மருத்துவா்கள் மட்டுமே உள்ளனா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.