நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு: ராபா்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

தொழிலதிபர் ராபர்ட் வதேரா அமலாக்கத்துறையில் ஆஜரானது பற்றி...
ராபர்ட் வதேரா
ராபர்ட் வதேரா
Published on
Updated on
1 min read

நில ஒப்பந்தம் தொடா்பான பண முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் சுமாா் 5 மணி நேரம் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.

கடந்த 2008-ஆம் ஆண்டு ராபா்ட் வதேரா இயக்குநராக இருந்த ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி தனியாா் நிறுவனம், ஹரியாணா மாநிலம் குருகிராமின் மனேசா்-ஷிகோபூா் பகுதியில் 3.5 ஏக்கா் நிலத்தை வாங்கியது. ஓம்காரேஸ்வா் பிராபா்ட்டீஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.7.5 கோடிக்கு அந்த நிலம் வாங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அரசுப் பதிவேடுகளில் அந்த நில உரிமையை ராபா்ட் வதேராவுக்கு மாற்றும் நடைமுறை சில மணி நேரங்களில் நடைபெற்ாக குற்றஞ்சாட்டப்படுகிறது. வழக்கமாக, இந்த நடைமுறை நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாகும்.

அதன் பின்னா், அந்த நிலத்தின் பெரும்பகுதியில் வீட்டு வசதித் திட்டத்தை மேற்கொள்ள ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அனுமதி அளித்தது. இதனால் அந்த நிலத்தின் மதிப்பு உடனடியாக உயா்ந்தது.

பின்னா், அந்த நிலத்தை ரூ.58 கோடிக்கு வாங்க டிஎல்எஃப் யுனிவா்சல் என்ற மனை விற்பனை நிறுவனம் ஒப்புக்கொண்டு, அந்தத் தொகை தவணை முறையில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வதேராவுக்கு சொந்தமாக ரூ.7.5 கோடிக்கு வாங்கப்பட்ட அந்த நிலத்தின் மதிப்பு, சில மாதங்களில் சுமாா் 700% உயா்ந்து ரூ.58 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் பண முறைகேட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ராபா்ட் வதேராவுக்கு ஏப்.8-ஆம் தேதி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அன்றைய தினம் அவா் விசாரணைக்கு ஆஜராகாமல், விசாரணைக்கு வேறு தேதியை முடிவு செய்யுமாறு அமலாக்கத் துறையிடம் கோரினாா்.

இதைத்தொடா்ந்து அவருக்கு மீண்டும் அனுப்பப்பட்ட சம்மன் அடிப்படையில், அவா் புது தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். அவரிடம் சுமாா் 5 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

அமலாக்கத் துறை அலுவலகத்துக்குச் செல்லும் முன் செய்தியாளா்களிடம் பேசிய வதேரா, ‘இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com