தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

ஒரு கிராமத்துக்கே காலணிகளை அனுப்பிய துணை முதல்வர்! மக்கள் நெகிழ்ச்சி

ஆந்திரத்தில் கிராமம் ஒன்றில் பெண்கள் வெறுங்கால்களுடன் நடப்பதைக் கண்ட துணை முதல்வர் பவன் கல்யாண் அனைவருக்கும் காலணிகளை அனுப்பி வைத்தார்.

News image

பவன் கல்யாண் - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2025, 9:53 pm IST

ஆந்திரத்தில் கிராமம் ஒன்றில் பெண்கள் வெறுங்கால்களுடன் நடப்பதைக் கண்ட துணை முதல்வர் பவன் கல்யாண் அனைவருக்கும் காலணிகளை அனுப்பி வைத்தார்.

ஆந்திர மாநிலம், அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரகு மற்றும் தம்பிரிகுடா பகுதிகளில் துணை முதல்வர் பவன் கல்யாண் சமீபத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பெடபாடு கிராமத்திற்கு சென்ற அவர் மக்கள் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.

அங்கு வசிப்பவர்களுடன் உரையாடியபோது பாங்கி மிது என்ற வயதான பெண்ணைக் கண்டார்.

அவர் காலணி இல்லாமல் வெறுங்காலில் நடத்திருக்கிறார். இதேபோல் கிராமத்தில் பலர் வெறுங்காலுடன் சென்றதையும் அவர் கவனித்திருக்கிறார். பின்னர் கிராமத்தில் வசிப்பவர்கள் குறித்த தகவலைக் கேட்டறிந்த பவன் கல்யாண், அனைவருக்கும் காலணிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

துணை முதல்வர் கேட்டுக்கொண்டதன் பேரில் கிராமத்தில் வசிக்கும் சுமார் 350 பேருக்கும் உடனே காலணிகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், இதற்கு முன்பு வேறு எந்த தலைவரும் எங்களைப் பார்க்கவோ அல்லது எங்களின் பிரச்னைகளைக் கவனிக்கவோ இல்லை.

பவன் கல்யாணின் இந்த நடவடிக்கையால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.