நவி மும்பை: டேட்டிங் செயலி மூலம் பழகி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

நவி மும்பையில் டேட்டிங் செயலி மூலம் பெண்ணிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நவி மும்பையில் டேட்டிங் செயலி மூலம் பெண்ணிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நவி மும்பை போலீஸில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில், நவி மும்பையின் சீவுட்ஸில் வசிக்கும் 26 வயது இளைஞர் டேட்டிங் செயலியில் தன்னுடன் பழகியதாக தெரிவித்தார்.

பின்னர் கர்கரில் உள்ள கட்டடம் ஒன்றில் வைத்து இளைஞர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு தடை!

கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை போலீஸார் பதிவு செய்துள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.

நாங்கள் ஆதாரங்களைச் சேகரித்து உண்மைகளை உறுதிசெய்து வருகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com