தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

பரத்பூரில் மூவர் மரணம் குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை..

Rajasthan

கோப்புப்படம்

Published On :

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் மூவரின் சடலம் கண்டெக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கூடுதல் எஸ்பி சதீஷ் யாதவ் கூறுகையில்,

பரத்பூரின் ஒரு கடை அருகே சாலையோரத்தில் மூவரின் சடலம் கிடைத்தது. விசாரணையில் இறந்தவர் அனிதா, அவரது 12 வயது மகன், மருமகன் சுபம் என அடையாளம் கணப்பட்டனர்.

கஞ்சோலி கிராமத்தில் உள்ள கடைக்கு வெளியே மூவரும் இறந்து கிடந்தனர். சடலங்களுக்கு அருகில் அடையாளம் தெரியாத பொடி அடங்கிய சந்தேகத்திற்கிடமான பொட்டலம் ஒன்றும், சிதறிக்கிடந்த பொருளின் தடயங்களும் மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு நாள்களாக அவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது. அனிதா இரண்டு நாள்களுக்கு முன்பு தனது மகனுடன் கரௌலியில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி, பரத்பூருக்குச் செல்வதாக தனது குடும்பத்தினருக்குத் தெரிவித்தார். அவரது கணவர் தேவேந்திரா தற்போது கர்நாடகத்தில் வசிக்கிறார்.

போலீஸார் குடும்பத்தினருக்குத் தகவல் அளித்ததை அடுத்து, பெண்ணின் சகோதரர் உடல்களை அடையாளம் கண்டுபிடித்தார். தற்கொலை உள்பட அனைத்து சாத்தியமான கோணங்களிலும் நாங்கள் விசாரித்து வருகிறோம், மேலும் உடல்களுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட பொடியின் தன்மை குறித்து ஆராயப்படுகிறது என்று அவர் கூறினார், ஆய்வு நடத்துவதற்காக சம்பவ இடத்திற்கு தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளது.

Summary

The bodies of a woman, her minor son and a man were found lying on the roadside near a shop in the Bharatpur district in Rajasthan on Saturday morning, the police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.