
தேசிய தலைநகர் அருகே சட்டவிரோதமாக வசித்துவந்த ஐந்து வங்கதேசத்தினர் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
காவல்துறையின் கூற்றுபடி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜூலை 15 முதல் தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திங்களன்று வரலாற்று நினைவுச்சின்னத்தை பார்வையிட வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
20-25 வயதுக்குள்பட்ட ஐந்து பேர் செங்கோட்டை அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
வழக்கமான சோதனையின் போது அவர்களிடம் செல்லுபடியாகும் நுழைவு அனுமதிச் சீட்டுகள் இல்லாததால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
விசாரணையில், ஐந்து பேரும் சுமார் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்கள் தில்லியின் பல்வேறு பகுதிகளில் தினகூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வருவதாக போலீஸாரிடம் தெரிவித்தனர்.
அவர்களிடம் வங்கதேச ஆவணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், விசாரணையின் போது சந்தேகத்திற்கிடமான பொருள்கள் அல்லது நடவடிக்கைகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.