தில்லி காவல் துறையின் வங்கதேச மொழி சர்ச்சைக்கு ஈஸ்ட் பெங்கால் கால்பந்து ரசிகர்கள் மிகப்பெரிய பதாகைகளை காண்பித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
மத்திய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் தில்லி காவல் துறை வங்காள மொழியை ’வங்கதேச மொழி’ எனக் குறிப்பிட்டிருந்தது.
நம் நாட்டுப்பண் இயற்றப்பட்ட வங்க மொழிக்கு இழைக்கப்பட்டுள்ள நேரடி அவமதிப்பு என தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் டூரண்டு கோப்பை போட்டியில் ஈஸ்ட் பெங்கால் - நம்தாரி அணிகளுக்கான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் 1-0 என வென்றது.
சுதந்திரத்திற்காக போராடிய நாங்கள் வங்கதேசத்தினரா?
இந்தப் போட்டியின்போது ஈஸ்ட் பெங்கால் ரசிகர்கள் மிகப்பெரிய பதாகைகளை வைத்து பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.
அந்தப் பதாகையில், “நாங்கள் சுதந்திரத்துக்காக துக்கில் தொங்கினோம். தற்போது, எங்களது தாய்மொழியைப் பேசுவதால் வங்கதேசத்தவர் (பங்களாதேஷி) என்று அழைக்கப்படுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
যতঠতà§à¦®à¦¿ নিà¦à¦¿à¦¯à¦¼à§ দিতৠà¦à¦¾à¦ à¦à¦¾à¦·à¦¾à¦° à¦à¦²à§
— East Bengal Ultras - North Bengal Wing (@ebultrasnbwing) August 6, 2025
পà§à¦°à¦¤à¦¿à¦¬à¦¾à¦¦à§à¦° রà§à¦ª হবৠততঠà¦à§à¦°à¦¾à¦²à§ ð´ð¡ https://t.co/B2YVo5E68t
சமூக வலைதளத்தில் இந்தப் பதாகைகள் வைரலாகி வருகிறது. மேற்கு வங்காளத்தில் இடம்பெயர்ந்தோர்கள் பலரும் குறிவைக்கப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
தில்லி காவல்துறையில் கடிதத்திற்கு மமதா பானர்ஜி, ”அவதூறான, அவமதிக்கும், தேச விரோதமான, அரசியலமைப்பிற்கு விரோதமானது செயல்” எனக் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணி
கொல்கத்தாவில் மிகவும் பிரபலமான ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணி 1920 ஆண்டு உருவாக்கப்பட்டது.
நூற்றாண்டைக் கடந்த இந்த கால்பந்து அணி டூரண்ட் கோப்பையில் 16 முறை கோப்பை வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது. மோகன் பகான் 17 முறை வென்றுள்ளது.
மொழி சர்ச்சைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த இவர்களது செயல் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது.
கடந்தாண்டு கொல்கத்தாவில் நிகழ்ந்த மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமையால் நிகழ்ந்த மரணத்துக்கு போட்டியாளர்களான ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணி, மோகன் பகான் அணி ரசிகர்கள் இணைந்து போராடியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துராந்து கோப்பை: மோகன் பகான் வெற்றி

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேச இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 50 வங்க தேசத்தினா் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பு

பிஃபா உலகக் கோப்பை: அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா - புகைப்படங்கள்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



