மீண்டும் அவை கூடியபோது, பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம் குறித்து விவாதம் கோரி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சிறிதுநேரம் பேசினாா். பின்னா், இந்திய கடலோரங்களில் சரக்கு போக்குவரத்தை அனுமதிக்கும் கடலோர சரக்கு போக்குவரத்து மசோதா-2025ஐ மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித்தடங்கள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தாக்கல் செய்தாா். சிறிதுநேர விவாதத்துக்குப் பின் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னா், அவை அலுவல்கள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.