தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புல்டோசர் நடவடிக்கை: 2 மாதங்களில் இடிக்கப்பட்ட 130-ல் பெரும்பாலும் இஸ்லாமியர் கட்டடங்களே!

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2 மாதங்களில் 130 சட்டவிரோத கட்டடங்கள் புல்டோசர் மூலம் இடிப்பு

News image

புல்டோசர் நடவடிக்கை - கோப்புப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2025, 2:14 pm

பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் கட்டடங்களை புல்டோசரை வைத்து இடித்து தரைமட்டமாக்கப்படுவது, தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. இருப்பினும், புல்டோசர் நடவடிக்கைகள் குறைந்தபாடில்லை.

உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகளவில் புல்டோசர் நடவடிக்கைகள் நடப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கை என்றுகூறி, கடந்த 2 மாதங்களில் 130 அங்கீகரிக்கப்படாத கட்டடங்களை அம்மாநில அரசு இடித்ததுடன், 190-க்கு சீல் வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, அவற்றில் பெரும்பாலும் இஸ்லாமியர்களின் கட்டடங்களாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசு மற்றும் தனியார் நிலங்களில் கட்டப்பட்ட இஸ்லாமியர்களின் கல்விச் சாலை, தொழுகைத் திடல், தர்கா மீது புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது ஒருசாரார் மீதான பாகுபாடு நடவடிக்கை என்ற சந்தேகத்தை எழுப்புவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.