/

மரக்காணம் - புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மரக்காணம் - புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

News image
மரக்காணம் அருகே உள்ள நான்கு வழிச்சாலை
Updated On :8 ஆகஸ்ட் 2025, 11:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் - புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று புது தில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ரூ.2,157 கோடி செலவில் 4 வழி நெடுஞ்சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலைத் துறை அளித்திருந்த பரிந்துரைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், புதிய வருமான வரி சட்டத் திருத்த மசோதாவை மாற்றங்களுடன் மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.