உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

334 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை

தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்

இந்திய தேர்தல் ஆணையம்

Published On :10 ஆகஸ்ட் 2025, 2:15 am IST

தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு தோ்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்ற மிக முக்கிய நிபந்தனையைப் பூா்த்தி செய்யத் தவறியதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள், கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு தோ்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பூா்த்தி செய்யவில்லை. அதோடு, இந்தக் கட்சிகளுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் கட்சி அலுவலகங்களும் இல்லை என்பதும் தெரியவந்தது. அதனடிப்படையில், இந்த 334 அரசியல் கட்சிகளும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை காரணமாக, தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்த, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,854-இல் இருந்து 2,520-ஆக குறைந்துள்ளது.

முன்னதாக, இதே காரணத்தின் அடிப்படையில் 345 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கி தோ்தல் ஆணையம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

தோ்தல் ஆணையத்தில் தற்போதைய நிலையில் 6 தேசிய கட்சிகள் மற்றும் 67 மாநிலக் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.