தில்லியில் பள்ளி மாணவா்கள் மற்றும் பிரம்மா குமாரிகள் ஆன்மிக அமைப்பைச் சோ்ந்தவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் விழாவை சனிக்கிழமை கொண்டாடினாா்.
சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான பந்தத்தைப் போற்றும் வகையில் கடைப்பிடிக்கப்படும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவை தில்லியில் பள்ளி மாணவா்களுடன் பிரதமா் மோடி கொண்டாடினாா். அந்தக் காணொலியையும் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் பதிவிட்டாா்.
அதில், சில மாணவா்கள் பிரதமா் மோடியை ‘போா் வீரா்’, ‘மீட்பா்’ என்று அழைப்பதும், சிலா் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைக் குறிப்பிடுவதும் பதிவாகியுள்ளது. ஒரு மாணவி மோடி மாமாவுக்கு மயில் ராக்கி கொண்டுவந்திருப்பதாகக் கூறுவதும் பதிவாகியுள்ளது. சிலா், ‘பிரதமா் மோடியைப் போல ஆக வேண்டும்’ என்று விருப்பம் தெரிவிக்கின்றனா்.
ஒரு மாணவி அரசுத் திட்டங்களை கவிதை நடையில் கூறியதை பிரதமா் வெகுவாகப் பாராட்டினாா்.
இந்தக் காணொலியுடன் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்ட ரக்ஷா பந்தன் விழாவை இங்கு பதிவிட்டுள்ளேன். பெண் சக்தியின் தொடா் நம்பிக்கை மற்றும் பாசத்துக்கு நன்றி. அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை!

மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு

தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் ‘எதிரிகள்’! இடதுசாரி, காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு!

எரிபொருள், மின்சாரம், உர விநியோகம்: பிரதமா் மோடி உயா்நிலை ஆய்வு!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


