புதிய வருமான வரி மசோதா 2025 மக்களவையில் இன்று(ஆக. 11) நிறைவேற்றப்பட்டது.
கடந்த 1961-இல் இயற்றிய வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட ’வருமான வரி மசோதா-2025’ கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை(ஆக. 8) திரும்பப் பெற்றாா்.
முன்னதாக, மக்களவை தற்காலிக குழுவின் பரிசீலனைக்கு இம்மசோதா அனுப்பப்பட்ட நிலையில், 31 எம்.பி.க்கள் அடங்கிய தோ்வுக் குழு, மசோதா தொடா்பாக சில பரிந்துரைகளை வழங்கியது. இதனைக் கருத்தில் கொண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றாா்.
இதனைத்தொடர்ந்து, அந்த மசோதாவின் புதிய பதிப்பு ஆக.11-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் தோ்வுக் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகள் சோ்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கிடையில் இந்த மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வெறும் 3 நிமிடங்களில் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக, மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
Summary
Income tax bill passed in Lok sabha
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










