அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் விபத்து: 2 போலீஸ் அதிகாரிகள் பலி

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் பலியாகினர்.

News image
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை.- கோப்புப்படம்.
Updated On :11 ஆகஸ்ட் 2025, 4:04 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் பலியாகினர்.

ஸ்ரீநகரிலிருந்து அமர்நாத் யாத்திரைப் பணியை முடித்துவிட்டு ஜம்முவுக்குச் புறப்பட்டு சென்ற மூன்று துணை ஆய்வாளர்கள் லஸ்ஜன் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த போலீஸ் அதிகாரிகள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருப்பினும், அவர்களில் இருவர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். பலியானவர்கள் சச்சின் வர்மா மற்றும் சுபம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேசமயம் காயமடைந்த அதிகாரி மஸ்தான் சிங் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

summary

Two police officers died in an accident on the Jammu-Srinagar national highway here, an official said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.