மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் மூலம், 22 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரின் பிஷ்னூப்பூர், சூராசந்திரப்பூர், சந்தேல், தௌபல், கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் இணைந்து கடந்த சில நாள்களாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளின் மூலம், காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சி, பீப்பள்ஸ் ரெவோலியூஷன் பார்டி ஆஃப் காங்லெய்பாக் மற்றும் யுனைடெட் லிபரேஷன் ஃபிராண்ட் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 22 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்துடன், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 பயங்கர ஆயுதங்கள், ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த நடவடிக்கைகளில் தேடப்பட்டு வந்த மெயங்பம் அமிதாப் சிங் (வயது 32) எனும் கிளர்ச்சியாளரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அசாமில் புதியதாக 10 துணை மாவட்டங்கள்!
Summary
It has been reported that 22 militants have been arrested in a series of operations carried out by security forces in Manipur.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜார்க்கண்டில் ரயிலில் கடத்தப்பட்ட 174 திருட்டு மொபைல்கள் பறிமுதல்: 2 பேர் கைது!

மணிப்பூா்: பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவாா்த்தை தீவிரம்

மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!
ஆயுதங்கள் கடத்தல்: 9 போ் கைது; 23 துப்பாக்கிகள் பறிமுதல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



