ஒடிசாவில் கடந்த ஒரு மாதத்தில் 4 பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், மாநில பாஜக அரசமைப்பின் மீது நம்பிக்கையை உருவாக்கத் தவறிவிட்டதாகக் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் குற்றம் சாட்டியுள்ளார்.
பர்க மாவட்டத்தில் 13 வயது பள்ளிச் சிறுமி ஆக. 11ல் தீக்குளித்து இறந்த ஒரு நாளுக்குப் பிறகு பிஜேடி தலைவரின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
இந்த நான்கு மரணங்களும் தற்செயலானவை அல்ல. ஒவ்வொரு நாளும் குற்றத்திற்கு ஆளான பிறகு மிகவும் துயரமான முறையில் இறக்கும் இதுபோன்ற பல பெண்கள் உள்ளனர். அவர்களின் விரக்தி வெறும் தனிப்பட்ட சோகம் அல்ல. ஒவ்வொரு சோகமும் அவர்களின் அலறல்களைக் கேட்கத் தவறியதைப் பிரதிபலிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பாகவும், மதிப்புள்ளதாகவும், கேட்கப்படுவதாகவும் உணரும் அமைப்பில் நம்பிக்கையை உருவாக்க பாஜக நிர்வாகம் தவறி வருகிறது. பெண்கள் தங்கள் உயிரை தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதும், அப்பாவி உயிர்கள் ஒவ்வொரு முறையும் இறக்கும்போதும் மிகவும் கவலையளிக்கிறது.
இதயத்தை உடைக்கும் இந்த செயலை நிறுத்த பாஜக அரசு எவ்வளவு காலம் காத்திருக்கும்? பாஜக அரசின் மௌனமும், செயலற்ற தன்மையும் ஒடிசாவின் மகள்களை மேலும் பாதிக்கப்படக்கூடியவர்களாக ஆக்குகிறது.
கடந்த ஒரு மாதத்தில் ஒடிசா முழுவதும் தீக்காயங்களால் இறக்கும் இளம் பெண்களின் வரிசையில் பள்ளி செல்லும் சிறுமி நான்காவது இடத்தில் உள்ளார்.
வடக்கு ஒடிசாவின் பாலசோரில் உள்ள கல்லூரியில் படிக்கும் 20 வயது மாணவி ஒருவர், பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஜூலை 12 அன்று தன்னைத்தானே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு எய்ம்ஸ்-புவனேஸ்வரில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஜூலை 19 அன்று, கடலோர ஒடிசாவின் புரி மாவட்டத்தில் உள்ள பலங்காவில் 15 வயது சிறுமி மூன்று நபர்களால் தீக்குளித்துக் கொல்லப்பட்டதாக நிலையில், ஆகஸ்ட் 2ல் எய்ம்ஸ்-தில்லியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஆகஸ்ட் 6ல் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் முன்னாள் காதலன் தனது நெருக்கமான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதாக மிரட்டியதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவி தீக்குளித்து இறந்தார்.
மேற்கு பிராந்தியத்தில் உள்ள பர்கர் மாவட்டத்தில் திங்கட்கிழமை 13 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது.
ஜூன் 15ல் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கடற்கரையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார், மேலும் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரி மாணவி விஷம் குடித்து 24 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு ஆகஸ்ட் 10 ஆம் தேதி இறந்தார்.
இவ்வாறு மாநிலத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் சம்பவங்களால் பாஜக அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
Summary
Leader of the Opposition in Odisha Assembly, Naveen Patnaik on Tuesday accused the state's BJP government of failing to create confidence in the system, which led to the deaths of four women who immolated themselves over various issues in the last one month.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்கக் கோரி மருந்து கடைகளை அடைத்து போராட்டம்

மேற்கு வங்கத்தில் உடனடி மக்கள்தொகை கணக்கெடுப்பு: பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



