பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

உலகின் டாப்-20 கோடீஸ்வரர்கள்: அதானிக்கு மீண்டும் இடம்!

டாப்-20 கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் அதானி!

கௌதம் அதானி

Published On :

உலகின் முதல் 20 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் கௌதம் அதானி மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின்படி, அதானியின் சொத்துமதிப்பு 79.7 பில்லியன் டாலராக உள்ளது.

பங்குச்சந்தையில் சற்று இறக்கத்தைச் சந்தித்தபின் அதானியின் சொத்து மதிப்பு திங்கள்கிழமை சரிவிலிருந்து மேம்பட்டுள்ளது. அதானியின் சொத்து மதிப்பு 2025-இல் மேலும் 1.01 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.

ஓரகிள் நிறுவனத்தின் லேர்ரி எல்லிசன் 305 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் இரண்டாமிடத்திலும், மெட்டா நிறுவனத்தின் மார்க் ஸக்கர்பெர்க் 269 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடனும், ஆமெஸான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் 243 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடனும் அதற்கடுத்தடுத்த இடங்களில் இந்தப் பட்டியலில் இருக்கின்றனர்.

இந்தியாவின் பணக்கார மனிதரான முகேஷ் அம்பானி அதில் 18-ஆவது இடத்தில் 99.5 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் இருக்கிறார். அதானி 20-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதுசரி உலக கோடீஸ்வரராக முதலிடத்தில் கோலோச்சுபவர் யார் தெரியுமா? வேறு யாராக இருக்க முடியும்? 378 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் முதலிடம் வகிக்கிறார் எலான் மஸ்க்..!

Summary

Adani Back In World's Top 20 Richest List

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.