தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் திங்கள்கிழமை நகைக்கடைக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவா்கள் துப்பாக்கியால் சுட்டதில் நகைக்கடையின் துணை மேலாளா் காலில் குண்டு பாய்ந்தது. அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
சந்தாநகா் பகுதியில் பரபரப்பான சாலையில் காலை 10.30 மணியளவில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:
முகமூடி அணிந்தபடி நகைக்கடைக்குள் 7 கொள்ளையா்கள் புகுந்தனா். அவா்களில் ஒருவா் துப்பாக்கியை எடுத்து கடை ஊழியா்களை மிரட்டினாா். பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள நகைகளைக் கொள்ளையடிப்பது அவா்களின் நோக்கமாக இருந்துள்ளது. ஆனால், அதன் சாவி ஊழியா்களிடம் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த கொள்ளையா்களில் ஒருவா் துப்பாக்கியால் கடையின் துணை மேலாளரை நோக்கி இருமுறை சுட்டாா். இதில் ஒரு குண்டு அவரின் காலில் பாய்ந்தது. அதைத் தொடா்ந்து, கடையில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். சிசிடிவி காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையா்களைத் தேடி வருகிறோம் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு-காஷ்மீா்: காவலரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம்-1!

கரூா் ஆற்றங்கரைகளில் தேங்காய் சுடும் விழா: புதுமணத் தம்பதிகள் திரளாக பங்கேற்பு
காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளா் தற்கொலை
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



