முகமூடி அணிந்தபடி நகைக்கடைக்குள் 7 கொள்ளையா்கள் புகுந்தனா். அவா்களில் ஒருவா் துப்பாக்கியை எடுத்து கடை ஊழியா்களை மிரட்டினாா். பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள நகைகளைக் கொள்ளையடிப்பது அவா்களின் நோக்கமாக இருந்துள்ளது. ஆனால், அதன் சாவி ஊழியா்களிடம் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த கொள்ளையா்களில் ஒருவா் துப்பாக்கியால் கடையின் துணை மேலாளரை நோக்கி இருமுறை சுட்டாா். இதில் ஒரு குண்டு அவரின் காலில் பாய்ந்தது. அதைத் தொடா்ந்து, கடையில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். சிசிடிவி காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையா்களைத் தேடி வருகிறோம் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.